Posts

Showing posts from December, 2020

2020

    கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் நடந்த திருமணங்கள் எல்லாமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும்.எல்லாமே ஒரு கண்ணுக்கு தெரியாத கிருமியினால் மாறிவிட்டது.இதோ டிசம்பர் மாதமும் வந்தாச்சு.    முகமூடிகள் அணிந்து சுற்றிய நம்மை முகக்கவசத்துடன் சுற்ற வைத்தது.பிரமாண்டங்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை.நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன்னு விசு பாணி விசாரணைகள்.கை குலுக்கல் நின்று இரு கை கூப்பி வணக்கம் சொல்லி.     இயற்கை என்ன சொல்ல வருகிறது என்று இன்று வரை தெரியவில்லை .கொரோனா இருக்கா இல்லையா என்று கூட தெரியாமல் தான் இருக்கிறோம்.தகரத்தட்டிகள் இப்போ மறைந்து விட்டன.இயற்கைப்பேரழிவுகள் எத்தனையோ வந்தும் நாம் மாறவில்லை. இன்று வெகுசில மாற்றங்களை பார்க்க முடிகிறது.ரோட்டில் யாரும் அவ்வளவா எச்சில் துப்புறதில்லை.இன்னைக்கு சந்தோஷமா இருந்தா போதும் பொய் சொல்றது தெரிந்தாலும் சரி சரி விடுங்க என்றும் போக முடிகிறது.அரசியல் கழிவுகள் பற்றி பேச விரும்பவில்லை.     மாணவர்கள் வகுப்பில் செய்த தொந்தரவு ஆன்லைனில் இல்லை.ஆனால் பயனிருக்கிறதா என்றும் தெரியவில்லை.எ