Posts

காக்கிநாடா பயணம்

    திடீர்னு ஒரு சந்தர்ப்பம் காக்கிநாடா போக.அது என்ன காக்கிநாடா அங்கே இருந்தவர்களும் இங்கே என்ன வேலை யா வந்தீங்க னு ஆச்சரியமா கேட்டாங்க.75 வருஷத்துக்கு முன்ன 1948ல எங்க அப்பா engineering இங்கே படிச்சாரு அந்த college பாக்க வந்தோம் னு சொன்னோம்.now it has become University நெகிழ்ச்சியான தருணங்கள்.🥰             சென்னை லேருந்து விசாகப்பட்டினம் போக train ஏற வந்தா railway station ல கிட்ட தட்ட நாலாயிரம் பேர் நிக்கறாங்க நடுங்க ஆரம்பிச்சது ஏதாவது சொன்னா திட்டு விழும் னு பேசாம ஏற நல்ல வேளை பெட்டிக்குள் யாரும் வரலை. அங்கே நிறைய கடற்கரைகள் ரெண்டு நாள்ல நாலு கடற்கரை னு யோசிச்சு முதல்ல dolphin light house போனோம் சின்ன வயதில் சென்னை light house  ஏறுனது.தம் பிடிச்சு மேலே ஏறி பார்த்தா ஆஹா கடலின் அழகு வங்காள விரிகுடா பரந்து கப்பல்களுடன்.🤩                   அங்கேருந்து அப்படியே yarada கடற்கரைக்கு போக ஒரு பக்கம் மலை மத்த பக்கம் எல்லா கடல் எங்க ஆத்துக்காரர் நடந்துட்டே என்ன போட்டோ எடுக்க ரெண்டு பசங்க பின்னாடியே வந்து நீங்க couplesஆனு கேக்க நாங்க முழிச்சோம்.உங்க ரெண்டு பேரையும் வீடியோ எடுத்து இருக்கேன் என்

மனிதம்

  • சின்ன வயசுல அப்பா கிட்ட கேட்டேன் யாருக்குப்பா குடுத்து உதவணும் முஸ்லிம் ஏழைகளுக்கா .இல்லமா those who are poor and needy .  • என் பையன் கிட்ட ஒரு நாள் ஏண்டா முஸ்லிம் மாதிரி இருக்க மாட்டேன்ற.என்னம்மா புதுசா சொல்றீங்க நீங்க நல்ல human being ஆ இருக்கணும் னு தானே எனக்கு சொல்லி வளத்தீங்க.  • நண்பர்களே எனக்கு தெரிந்து மதம் என்னும் மதம் சமீப காலமாய் தான் எல்லோரிடமும் புகுத்தப்பட்டது.  • மதமா மனிதமா  சிந்தித்து வாக்களியுங்கள் நண்பர்களே .🙏

பேய் உணர்வு

         இங்கே சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. பயப்படக்கூடாது.தைரியமாப் படிக்கணும் ராத்திரியில் வூட்டுக்காரர எழுப்பி பயம்மா இருக்குபானு சொல்லக்கூடாது.              சுமார் முப்பது வருஷத்துக்கு முன்ன நான் கல்யாணம் ஆகாத தைரியமான பாரதி கண்ட புதுமைப்பெண்.அண்ணாமலை பாலிடெக்னிக் சிதம்பரம்ல paper valuation அப்பல்லாம்  ஒரு department papers னா தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் கூடுவோம் . கோவைலேருந்து அஞ்சாறு பேரு ladies இருப்போம்.போனா அங்கே college கு முன்னாடி இருக்கற guesthouse ல தங்கணும். மேல ரெண்டு ரூம் கீழே ரெண்டு ரூம். எல்லோரும் கோயிலுக்கு போலாம்னு கிளம்ப நான் டயர்டா இருக்கு வரலைனு சொல்லி கதை புக் படிக்க ஆரம்பித்தேன்.                அந்த guset house சுத்தி மழைத்தண்ணி அதனால் தவளை சத்தம் வேற.சரியா 7மணிக்கு கரெண்ட் போச்சு.நல்ல வேளை அங்கே மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் இருக்க பத்த வெச்சுட்டு படுத்தேன்.முதுகு பக்கமா மூச்சு விடற சத்தம் பாம்பு ஏதாவது இருக்குமோன்னு மெழுகுவர்த்தி தூக்கி மேல கீழ எல்லா இடத்திலும் பாத்துட்டு திரும்ப வந்து படுத்தா வேகமா மூச்சிறைக்கற சத்தம் திரும்பி பா

கனவுகள்

    மேகாலயா மிக நீண்ட கால கனவு பலமுறை முயன்று போக முடியாமல் சண்டையில் முடிஞ்சிருக்கு.அப்புறமா எனக்கு உடம்பு சரியில்லாம போக அப்படியே மறந்தே போச்சு.இந்த பொங்கல்ல திரும்பவும் மேகாலயா ஞாபகம் அவர் நண்பர் குடும்பம் என் நண்பர் குடும்பம் யாரும் வரலன்னு சொல்லவும் கொஞ்சம் தூர நண்பர் கேட்டவுடன் சரின்னு சொல்ல கடகடன்னு flight ticket எல்லாம் போட்டு இவருக்கு தெரிஞ்ச forest dept நண்பர்கள் guidance வெச்சு அங்கே permission வாங்கி roomலாம் போட்டாச்சு.         ரெண்டு பேருக்கும் செம fever அதயும் மீறி   14 ஆம்தேதி கிளம்பினா வானிலை காரணமா flight ரெண்டு மணி நேர late இரவு பன்னெண்டு மணிக்கு Guwahati போய் சேந்து airport விட்டு வெளியே வந்து ஊருக்கு உள்ள போகப் போக ஒண்ணுமே நல்லாவேஇல்ல ஒரே புழுதி இதுக்கா இவ்ளோ ஆசைப்பட்டாய் பாலகுமாரினு வெளியே சொல்ல முடியல.       காலைல கிளம்பி Shillong க்கு பயணம் வழியெல்லாம் நம்ம கோட்டயம் போலவே அங்கே umiam lake போனோம் speed boatல ஏறினோம் அப்படியே மாறிட்டேன்.ஆஹா ஆஹா I love India 😍அப்புறம் khasi dress போட்டு photoshoot எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பி Don Bosco museum  ஒரு air walk மேலே

மழையும் புயலும்

            இயற்கையை நேசிக்கறவங்க மழைய நேசிக்காமஇருப்பாங்களா.எல்லாரப்போலத்தான் நானும் என்ன இப்போ தொப்பலா நனையறதில்ல மத்தபடி மழய ரசிக்கறதோட பாட்டும் தானா வரும் ‌.        கடல் அந்த அலைகள் அந்த சந்தோசத்தில் ஆடறது எல்லாம் சுனாமிக்கு அப்புறம் அப்படியே காணாம போயிடுச்சு.ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா மறுபடியும் ரசிக்க ஆரம்பிச்சேன்.      போன மாச கடைசில இவருக்கு சென்னைக்கு மாறுதல் .போன அன்னைக்கே மழை .மழைன்னு சொல்றத விட தூறல் தான் மூணாவது மாடில தங்கியிருந்தப்போ ஜன்னல் வழியே பாத்துட்டு இருந்தேன் ரெண்டு புறா அழகா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்துச்சு. படம் பிடிக்க கூட அசையல நான் அசஞ்சா அது பறந்து போகும் பாவம் மழைல ன்னு அப்படியே அசையாம நின்னேன்.             அடுத்த நாள் காலைல சாப்பிட கூட்டிட்டு போனார்.ரோடு முழுசும் சகதி தண்ணீ  சாக்கடை லேருந்து கொந்தளிச்சுட்டு வருது அவ்ளோ குப்பை அடைச்சு இருக்கணும் அப்பவே நினைச்சேன் மழை தீவிரமாச்சுன்னா நிலைமை மோசமாகிடுமேன்னு.ரெண்டு நாள்ல கோவைக்கு வந்துட்டோம்.ஆட்டோக்கு உள்ள தண்ணீ பஸ் அப்படியே மெதந்துட்டு வருது.அப்பவும் நான் enjoy பண்ணிட்டு தான் வந்தேன்.      ரெண்

மதங்களைத்தாண்டி

      வசீமோட friendக்கு கல்யாணம்.அவங்கஅம்மா நேத்து கல்யாண பத்திரிகை குடுக்கும் போது மூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்க குடுத்த மெக்கா தண்ணீர் பாட்டிலும் கங்கா தீர்த்தத்தையும் சாமி படத்துக்கு முன்ன வெச்சிருக்கேங்க னு சொன்னதும்          என் நண்பன் morning wishes கூட முகமது ஷமி  செத்துப்போவேனே தவிர நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் னு சொன்னதை சேத்து அனுப்பியதும் அடப்போங்கடா நீங்களும் உங்க மதத்துவேஷங்களும் எங்கள ஒரு டேஷும் பண்ண முடியாதுனு சொல்லத்தான் இந்த பதிவு.          நான் இன்னைக்கு வாழறேன்னா உறவுகள் தொழுகைகளுடன் நண்பர்கள் கிறிஸ்து ஆலயங்களில் ஒலித்த ப்ரார்த்தனைகளும் கோயில்களில் காட்டிய தீபாராதனைகளும்தான். இங்க ரம்ஜான் பிரியாணி தீபாவளி தித்திப்பு மட்டும் பரிமாற்றம் இல்லை.இது உணர்வுகளின் பரிமாற்றம். இது இந்தியா நாங்க இந்தியர்கள்.வேணும்னா பாரத்னு மாத்தலாம் எங்கள மாத்தமுடியாது இது காலம் காலமா வேர் பரந்து விரிந்து உசுரு இருக்கறவரை இருக்கும். I Love My India.

இடமா படமா

       போன வாரம் முழுவதும் அலுவலக பரபரப்பு வீட்டுக்காரருக்கு வெள்ளிக்கிழமை நடந்த meeting நல்லா போச்சு அதனால எங்காவது போலாமேனு யோசிச்சப்போ ரொம்ப நாளா காந்தலூர் போக முடிவு பண்ணிட்டு முடிவு மட்டுமே தூங்க போயாச்சு .         காலைல எப்பவும் போல டீ குடிச்சிட்டு போலாம்னு confirm பண்ணி bagல dressலாம் எடுத்து வெச்சு போனாப்போகுதுன்னு அவருக்கு ஒரு hoodies எனக்கு sweater மட்டுமே குளிர் அவ்வளவா இருக்காதுன்னு நினைச்சு வெச்சாச்சு.சுமார் ஏழரைக்கு கிளம்பி போயிட்டு இருக்கும் போது ரூம் புக் பண்ண இவர் யாருக்கோ போன் பண்ண அவர் மறையூர் தங்கலாமேனு சொல்ல நான் tension ஆயிட்டேன் தங்குனா காந்தலூர் இல்லை னா நான் வரலை னு சண்டை ஆரம்பம்.             அப்புறம் அந்த நண்பரே கூப்பிட்டு ஒரு contact no. குடுத்தார்.போய் பாருங்க னு .மறையூர் செம வெயில் அத தாண்டி இறைச்சல்பாறானு அருவி ஆஹா தூவானம் அருமை அருமை.அப்படிக்கா காந்தலூர் போய் ஒரு பார்வை சுத்தி மலைகளும் அதனைப்போர்த்திய மேகமூட்டமும் ஆஹாதேவலோகத்தில் இருக்கிறேனானு சந்தேகம் வந்தது.அப்டியே குளிர் அள்ள இருக்குற ரெண்டு pant sweater எல்லாம் போட்டு quilt இழுத்து போர்த்தி திரும்பி ப