Posts

அலைமகள்

Image
நில் என்றேன்  அப்படியே நின்றது ஆனால்  பாவமாக  பார்த்தது சரிசரி மெதுவா என்றேன்  மகிழ்ச்சியில்  பொங்கி தழுவியது. 🥰

வார்த்தைகள்

      இந்த தலைப்பு எடுத்து கிட்ட தட்ட ஒரு மாசம் இருக்கும்.ஏனோ எழுத வார்த்தைகள் கோர்வையா வரல.ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்.எத்தனை உண்மை ‌        ரோட்ல நடக்கவே பயப்படற பொண்ணு நான் அந்த அளவுக்கு அப்பா தோள்லயே வளர்ந்தேன்.college சேர்ந்த பின்ன அப்பா சொன்ன வார்த்தை நீ சூரியன் மா நாய்கள் குலைக்கத்தான் செய்யும் போயிட்டே இருக்கணும் னு.               எந்த அளவுக்கு positive வார்த்தை என்னை encourage பண்ணுதோ அதே அளவு negative வார்த்தை என்னை உடைஞ்சு போகவும் வைக்கும் அப்போ எல்லாம் எனக்கு நானே பாடிக்கற பாட்டு சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கை விடுவாரோ சோர்ந்து போகாதே.             வார்த்தைகளின் பலம் மிகமிக அதிகம் ‌.என் கடின காலத்தில் என் மகன் சொன்ன வார்த்தைகள் அம்பது வருஷம் வாழ்ந்திருக்க ஏழு மாசம் பொறுத்துக்க மாட்டியா. அழறியாமா சரி அழுது முடிச்சு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் வேற வேல...

2024

      ஜனவரில ஆரம்பிச்சது  டிசம்பர் வரை எண்ணற்ற பயணங்கள் இந்த வருஷத்துல.சென்னைக்கு transfer ஆகி வந்ததுலேருந்து போதும் போதும்கிற அளவு ரயில் பயணங்கள்.ஒவ்வோரு தடவையும் புது புது அனுபவம்.         காடுகள் மலைகள் அருவிகள் கடற்கரை னு நிஜமாகவே இயற்கை என்னை கூப்பிட்டு கூப்பிட்டு சந்தோஷப்படுத்திய வருடம் இது.   எங்காவது போறதுக்கு முன்னாடி நிறைய தடவை உடம்பு சரியில்லாம போச்சு என்பதும் இந்த ஐந்து வருஷத்தில் இவ்வளோ படுத்தது இல்லைங்கறதும் உண்மை.          ஆனா அதையும் மீறி இந்த நாட்கள் மீண்டும் கிடைக்குமோ கிடைக்காதோ னு சுத்தியிருக்கேன். இதுல காக்கிநாடா போனது அந்த ஊரில் நடக்கும் போது எல்லாம் அப்பா இங்கே எல்லாம் நடந்து இருப்பார்ல னு தோணிட்டே இருந்தது. படிப்பு மேல் எவ்வளவு ஆர்வம் இருந்து இருந்தா அந்த காலத்தில் இங்கே வந்து இருப்பார்னு ஆச்சரியமாக இருந்தது.          இப்போ திடீர்னு குற்றாலம் போக முடிஞ்சது.இது வரை நான் போனதே‌ இல்லை.போன போது ஒரே வெள்ளம் உள்ளே அனுமதிக்கல.ஆனா ஐந்தருவில இவர் கேட்டு நாங்க ரெண்டு பேர் மட...

கடற்கரை

     போன வருஷம் டிசம்பர் ல பெசன்ட் நகர் பீச் க்கு ரொம்ப ஆசையா போனேன் . நுழையும் போதே நிறைய கடைகள் அப்புறம் கடற்கரை ல போய் உக்காரலாம்னா நிறைய நாய் காக்கா தலைக்கு பக்கமா பறந்து பறந்து போச்சு.கூட்டமும் ஜாஸ்தி . கொஞ்ச நேரம் தான் உக்காந்தேன் .போய் பஜ்ஜி கடைல அம்பது ரூபாய்க்கு அஞ்சு சாப்பிட்டு கிளம்பிட்டோம்.                 இந்த வாரம் போலாம் னு வீட்டு ல சொன்னப்போ பழசு அப்படியே rewind ஆச்சு.ஆனாலும் வீட்டுக்குள்ளயே இருக்கோமே போலாம் னு கிளம்பினேன்.Beach உள்ளே நுழையும் போதே நம்மாளுக்கு டீ ஞாபகம் வர அங்கே இருந்த turkey tea shopல உக்கார்ந்து டீ சக்கரை இல்லாமனு கேக்க சார் காஃபி வேணா சக்கரை இல்லாமல் கிடைக்கும் னு அந்த கடைக்கார பொண்ணு சொல்ல சரினு wait பண்றோம் பண்றோம் பண்ணிட்டே இருந்தோம்.  பொறுமையிழந்து கேக்க சார் மணல்ல வெச்சு சூடு பண்ணி தருவோம் அதான் இப்போ ரெடியாயிடும்னு மறுபடியும் ரொம்ப நேரம் கழிச்சு கொண்டு வந்து குடுத்தது.அதுல சக்கரை சேர்த்து தான் இருந்தது.              ஒரு வழியாக கடற்கரை நோக்கி நகர்ந்தோம்.ஆ...

மனசு

                   June லயே check up போக வேண்டியது.போன ரெண்டு தடவையும் reports அவ்வளவா திருப்தி இல்லை என்னை வைத்து scan எடுக்க ஒரு Dr team ஏ ஆராய்ந்து கடைசியில் senior Dr வந்து அவர்களுக்கு explain பண்ணி report தந்தார்கள். Final ஆ Dr Guhan அவரும் மாத்திரை வேற குடுத்து இருக்கேன் அடுத்த தடவை பாக்கலாம்னு சொன்னார்.Decemberல போனா அப்பவும் ஒண்ணும் சொல்லலை ஆறு மாசம் கழிச்சு வாங்க எப்போதும் நல்லா இருக்குமா என்பவர் ஏன் இப்படி சொல்றார் னு மனசுல கொஞ்சம் பயம் அதனால் இந்த தடவை தள்ளி போட்டுட்டு வந்தேன்.        நேத்து போனா சரியான கூட்டம்.கடவுளே மனசுலயும் பதைபதைப்பு ரொம்ப நேரம் உக்காந்துட்டு இருந்தேன். அப்போ 85 வயசு மாமி நடக்க தடுமாற மற்ற பெண்கள் உடனே பிடித்துக் கொண்டார்கள்.அவர் பையன் அட என்ன என்று அவர் கன்னத்தில் தட்டி ஒண்ணும் இல்லை மா என்று சொல்ல மற்றவர்கள் ஆமாம்மா நாங்க எல்லாம் அப்படித்தான் பயப்படாதீங்க னு ஆறுதல் கூற அந்த மாமி பயம் லாம் இல்லை மா இந்த வயசுல னுதான் கஷ்டமாக இருக்கு என்று அழுதது சங்கடப்படுத்தியது.மதங்கள் எல்லாம் மருத்த...

கடல்

      சென்னை வந்ததுலேருந்து எனக்கு கடல் மேல் விருப்பம் குறைஞ்சுடுச்சு ஏன்னு தெரியல.எதுவுமே கிடைக்கும் வரைதான் போல.நேத்து அவரோட நண்பர் பையன் கல்யாணம் பாண்டிச்சேரி ல Google பண்ணி பாத்தா paradise beach blue flag beach Edan beach னு இருந்தது.சரி நானும் வர்றேன் னு கிளம்பி காலைல beach போனா ஆடி அமாவாசை னு எல்லாம் ஒரே பூ பழம் னு கடற்கரையே குப்பை.இது போதாதுனு ஒருத்தர் எல்லார் முன்னாலயும் உக்கார்ந்து போயிட்டு இருக்கார் . அவர் இஷ்டம் அது. நான் நொந்து போய் husband கிட்ட  எனக்கு இப்பல்லாம் கடல பாக்கவே பிடிக்கவில்லை னு வருத்தமா சொன்னேன்.             கடல் மாதாக்கு கேட்டுருச்சு போல ஆஹா நம்மளுக்கு புடிச்ச ஒருத்தி இப்படி பேசுறாளேனு யோசிச்சு மேகம் கூட discuss பண்ணியிருக்கு.சாயந்தரமா கோவளம் beach போலாமானு கேட்டதுக்கு நான் அவ்ளோ விருப்பம் இல்லாம சரி னு சொன்னேன் சொல்லிட்டு மேல பாத்தா ரெண்டு குட்டி மேகம் குண்டு குண்டா இருந்துச்சு அப்படியே கொஞ்ச நேரத்தில் வர்ண ஜாலம் காட்ட ஆரம்பிச்சு வானவில் போல மேகம் முழுசும் கலர் கலரா ஆஹா ஆஹா னு படம் எடுக்க ஆரம்பிச்சேன்.அந்த j...

அம்மாவின் குரல்

          என்னமோ தெரியல இன்னைக்கு அம்மா ஞாபகம் அதிகமாவே வருது.எனக்கும் அம்மாவுக்கும் உள்ள attachment கம்மி.ஆனா என்னால் கஷ்டப்பட்டதென்னவோ அம்மாதான் .2011ல ஊட்டிக்கு transfer வந்தப்போ தினமும் phone ல அழுதிருக்கேன்.அம்மா நீ போகாத எவ்ளோ நாள் னாலும் leave போட்டு இருனு சொல்லிட்டே இருந்தாங்க.அம்மாகிட்டனு இல்லை எல்லார் கிட்டயும் கண்டிப்பா பேசியே பழகிட்டேன்.ஒட்டுதலும் கம்மியா ஏன்னா சின்ன வயசுல ஏற்பட்ட பேரிழப்பு என்னால இன்ன வரை மீள முடியல.             அம்மா எவ்வளவோ சொல்லியும் அடுத்த குழந்தைனு போகாததுக்கு ரெண்டு முக்கிய காரணம் என் பிரசவ காலத்தில் அம்மா பட்ட கஷ்டங்கள் அப்புறம் என் மகன் இடத்தில் இன்னோர் குழந்தைக்கு இடமில்லை என்று.அம்மா கஷ்டப்படக்கூடாதுன்னு நானும் நான் கஷ்டப்பட்டுடக் கூடாதுன்னு அம்மாவும் வாழ்ந்தோம்.அதுவும் அந்த December மாசம் முதல் வாரத்திலேயே எனக்கு BP ஏறி வீட்டிலேயே drips போட்டு இருந்த போது அம்மா phone போட வசீம் கிட்ட தூங்கறேன்னு சொல்ல சொன்னேன் ஏன் னா அழுவேன் அம்மா உடனே வரணும் னு நினைப்பாங்க பாவம்.அரை மணிநேரம் கழிச்சு திரும்ப அ...