ஈத் முபாரக்

     ரம்ஜான் ஈத் முபாரக் . முக்கிய பண்டிகை னா ரம்ஜானும் பக்ரீத்தும்.ரம்ஜானுக்கு கண்டிப்பா புதுத்துணி உண்டு பக்ரீத் பற்றி ஞாபகம் இல்லை.

      ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது பெரிய கர்வம் பள்ளிப்பருவத்தில்.நான் சரியாக சாப்பிட மாட்டேன் னு எங்க அம்மா சஹருக்கு எழுப்பாம விட்டுடு வாங்க.அழுவேன்.கொஞ்சம் பெரியவளானதும் நோன்பு வெக்கலன்னா புதுத்துணி வாங்க கூடாது னு வைராக்கியமா இருந்திருக்கிறேன்.

        காலேஜ் படிக்கும் போது எனக்கு முடியாது.அப்போவே ரம்ஜான் அன்னைக்கு practical exam பண்ணியிருக்கேன்.அப்புறம் சத்தியமங்கலத்தில் மிக ஆழமான நோன்பு நாட்கள்.பக்கத்து வீடுகளில் பண்டமாற்று முறை.பாட்டி அம்மா நான் மூன்று பேரும் இருப்போம்.அப்பாவால் முடியாது ஆனால் அவரால் முடிந்த அளவுக்கு வாழைப்பழம் பேரிச்சை சாக்லேட் எல்லாம் வாங்கி பள்ளிவாசல் இஃப்தாருக்கு போய் நோன்பாளிகளுக்கு குடுத்து தானும் நோன்பு துறந்தார்.

          தராவீஹ் தொழுகை அப்பா விட்டதே இல்லை.எங்கள் வீட்டில்  புதுசா fridge வாங்கி இருந்தோம்.எல்லோரும் தண்ணீர் எலுமிச்சை ஜூஸை கொண்டு வந்து தருவார்கள்.அதை வாங்கி வைத்து மறுபடியும் அவர்களுக்கு தருவது என்னுடைய‌வேலை.அப்பா பள்ளிவாசல் நோன்பு கஞ்சி மற்றும் வடை போண்டா வாங்கி கொண்டு வருவார்கள். 

      ரம்ஜானுக்கு முதல் நாள் மருதாணி வைத்து அடுத்த நாள் புதுத்துணி உடுத்தி ஆண்டவனிடம் சிவந்த கைகளுடன் துவா கேட்டு நிற்பது போல் ஒரு சந்தோஷம் எதுவுமேயில்லை.அப்பா ஷேர்வானி போட்டு கண்களில் சுர்மா தலையில் fur கறுப்பு தொப்பியுடன் அத்தர் பூசி தொழுகைக்கு போவார்.அப்பா என்றாலே பெருமை தானே.

      அம்மா செய்யும் பிரியாணி அந்த பால் சேமியா சான்ஸே இல்லை . அடுத்த நாள் schoolக்கு பிரியாணி எடுத்து கொண்டு போய் சாப்பிட்ட அழகான நாட்கள்.சின்ன சின்ன சந்தோஷங்கள்.பொய்யில்லாத வாழ்க்கை.ஈகைக்குணத்தை வளர்த்த பண்டிகைகள்.

     இப்போது நிறைய பகட்டுதான் இருக்கிறது. என்ன செய்ய 😀



Comments

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

முடி திருத்தம்

கடற்கரை