பேய் உணர்வு
இங்கே சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை.
பயப்படக்கூடாது.தைரியமாப் படிக்கணும் ராத்திரியில் வூட்டுக்காரர எழுப்பி பயம்மா இருக்குபானு சொல்லக்கூடாது.
சுமார் முப்பது வருஷத்துக்கு முன்ன நான் கல்யாணம் ஆகாத தைரியமான பாரதி கண்ட புதுமைப்பெண்.அண்ணாமலை பாலிடெக்னிக் சிதம்பரம்ல paper valuation அப்பல்லாம் ஒரு department papers னா தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் கூடுவோம் . கோவைலேருந்து அஞ்சாறு பேரு ladies இருப்போம்.போனா அங்கே college கு முன்னாடி இருக்கற guesthouse ல தங்கணும். மேல ரெண்டு ரூம் கீழே ரெண்டு ரூம். எல்லோரும் கோயிலுக்கு போலாம்னு கிளம்ப நான் டயர்டா இருக்கு வரலைனு சொல்லி கதை புக் படிக்க ஆரம்பித்தேன்.
அந்த guset house சுத்தி மழைத்தண்ணி அதனால் தவளை சத்தம் வேற.சரியா 7மணிக்கு கரெண்ட் போச்சு.நல்ல வேளை அங்கே மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் இருக்க பத்த வெச்சுட்டு படுத்தேன்.முதுகு பக்கமா மூச்சு விடற சத்தம் பாம்பு ஏதாவது இருக்குமோன்னு மெழுகுவர்த்தி தூக்கி மேல கீழ எல்லா இடத்திலும் பாத்துட்டு திரும்ப வந்து படுத்தா வேகமா மூச்சிறைக்கற சத்தம் திரும்பி பாத்தா ஒண்ணும் இல்ல நம்ம விடற மூச்சா இருக்குமோன்னு கொஞ்சம் நிறுத்தி பாத்தேன் அப்போ சத்தம் இல்லை.கொஞ்ச நேரத்தில் மறுபடியும் . இப்போ லைட்டா பயம் வந்தது.நல்லா இருட்டிடுச்சு வேற கரண்ட் வரவேயில்ல.அப்போ மாடில யாரோ வேகமா நடக்கற சத்தம் சரி வெளியே போய் பாப்போம் னு மெழுகுவர்த்தி தூக்கிட்டு போனேன்.போன வேகத்தில டப்புனு மெழுகுவர்த்தி அணைஞ்சுடுச்சு மேலயும் யாரும் இல்லை இதென்னடா வம்பா போச்சுனு bed room கும் போகாம பயந்து வெளியே ரூம்லயே உக்காந்துட்டேன்.
அப்புறம் கரண்ட் வந்தது போன மத்த ladies ம் வந்துட்டாங்க. நான் எதுவும் சொல்லிக்கல.அப்புறமா சாப்பிட்டு எல்லோரும் படுக்க வந்த பின்ன ஒருத்தவங்க ஆரம்பிச்சாங்க பாருங்க எனக்கு பயத்துல கண்ண மூடக்கூட முடியல.
இப்போ நடந்த exam கு hall ticket குடுக்கலன்னு college பையன் ஒருத்தன்
H.O.D ய துரத்த அவர் college லேருந்து ஓடி இந்த guesthouse அ சுத்தி சுத்தி மேல ஏறி கீழ ஓடி அவன் விடாம வெட்டிகொன்னுட்டான் னு.ஆஹா மூச்சிரைப்பு மேல யாரோ ஓடுனது மெழுகுவர்த்தி அணைஞ்சது இதெல்லாம் என்னன்னு இதுவரை தெரியலயே. உங்களுக்கு ஏதாவது புரியுதா.🥵🥵
பயப்படக்கூடாது.தைரியமாப் படிக்கணும் ராத்திரியில் வூட்டுக்காரர எழுப்பி பயம்மா இருக்குபானு சொல்லக்கூடாது.
சுமார் முப்பது வருஷத்துக்கு முன்ன நான் கல்யாணம் ஆகாத தைரியமான பாரதி கண்ட புதுமைப்பெண்.அண்ணாமலை பாலிடெக்னிக் சிதம்பரம்ல paper valuation அப்பல்லாம் ஒரு department papers னா தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் கூடுவோம் . கோவைலேருந்து அஞ்சாறு பேரு ladies இருப்போம்.போனா அங்கே college கு முன்னாடி இருக்கற guesthouse ல தங்கணும். மேல ரெண்டு ரூம் கீழே ரெண்டு ரூம். எல்லோரும் கோயிலுக்கு போலாம்னு கிளம்ப நான் டயர்டா இருக்கு வரலைனு சொல்லி கதை புக் படிக்க ஆரம்பித்தேன்.
அந்த guset house சுத்தி மழைத்தண்ணி அதனால் தவளை சத்தம் வேற.சரியா 7மணிக்கு கரெண்ட் போச்சு.நல்ல வேளை அங்கே மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் இருக்க பத்த வெச்சுட்டு படுத்தேன்.முதுகு பக்கமா மூச்சு விடற சத்தம் பாம்பு ஏதாவது இருக்குமோன்னு மெழுகுவர்த்தி தூக்கி மேல கீழ எல்லா இடத்திலும் பாத்துட்டு திரும்ப வந்து படுத்தா வேகமா மூச்சிறைக்கற சத்தம் திரும்பி பாத்தா ஒண்ணும் இல்ல நம்ம விடற மூச்சா இருக்குமோன்னு கொஞ்சம் நிறுத்தி பாத்தேன் அப்போ சத்தம் இல்லை.கொஞ்ச நேரத்தில் மறுபடியும் . இப்போ லைட்டா பயம் வந்தது.நல்லா இருட்டிடுச்சு வேற கரண்ட் வரவேயில்ல.அப்போ மாடில யாரோ வேகமா நடக்கற சத்தம் சரி வெளியே போய் பாப்போம் னு மெழுகுவர்த்தி தூக்கிட்டு போனேன்.போன வேகத்தில டப்புனு மெழுகுவர்த்தி அணைஞ்சுடுச்சு மேலயும் யாரும் இல்லை இதென்னடா வம்பா போச்சுனு bed room கும் போகாம பயந்து வெளியே ரூம்லயே உக்காந்துட்டேன்.
அப்புறம் கரண்ட் வந்தது போன மத்த ladies ம் வந்துட்டாங்க. நான் எதுவும் சொல்லிக்கல.அப்புறமா சாப்பிட்டு எல்லோரும் படுக்க வந்த பின்ன ஒருத்தவங்க ஆரம்பிச்சாங்க பாருங்க எனக்கு பயத்துல கண்ண மூடக்கூட முடியல.
இப்போ நடந்த exam கு hall ticket குடுக்கலன்னு college பையன் ஒருத்தன்
H.O.D ய துரத்த அவர் college லேருந்து ஓடி இந்த guesthouse அ சுத்தி சுத்தி மேல ஏறி கீழ ஓடி அவன் விடாம வெட்டிகொன்னுட்டான் னு.ஆஹா மூச்சிரைப்பு மேல யாரோ ஓடுனது மெழுகுவர்த்தி அணைஞ்சது இதெல்லாம் என்னன்னு இதுவரை தெரியலயே. உங்களுக்கு ஏதாவது புரியுதா.🥵🥵
பயமுறுத்தாதீர்
ReplyDeleteHa ha 🤣
Delete